×

வியாபாரியிடம் 4 பவுன் தங்க செயின் வழிப்பறி

பாலக்காடு, பிப். 3: பாலக்காடு டவுண் பகுதியில் பைக்கில் சென்ற வியாபாரியிடம் 4 பவுன் தங்க செயின் மற்றும் செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து தப்பியோடி 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.  பாலக்காடு மாவட்டம் பல்லசேனாவைச் சேர்ந்தவர் ரிஜூ. இவர் கடந்த  31ம் தேதி இரவு பாலக்காடு காய்கறி மார்கெட்டிலிருந்து சில்லரை வியாபாரத்திற்காக காய்கறிகள் வாங்கி தனது பைக்கில் பல்லசேனா நோக்கி சென்றுள்ளார். அப்போது பாலக்காடு தோட்டிங்கல் பகுதியில் பின்னால் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரது பைக்கை வழிமறித்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.  தொடர்ந்து ரிஜூ கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயின் மற்றும் செல்போனை பறித்து தப்பிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பாலக்காடு டவுன் சவுத் எஸ்.ஐ., அப்துல் முனீர் வழக்குப்பதிந்து வழிப்பறி திருடர்களை தேடி வந்தார். இந்த நிலையில் பாலக்காடு தோட்டிங்கல் பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்தபோது இரண்டு வாலிபர்கள் பைக்கில் வந்துள்ளனர்.

இவர்களை போலீசார் தடுத்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். மேலும், சந்தேகமடைந்த போலீசார் இவர்களிடம் விசாரணை செய்தபோது பாலக்காடு ஜெயமாதா கல்லூரி அருகே வசிக்கின்ற அன்ஷார் (25), தோட்டிங்கல்லைச் சேர்ந்த ஹபீன் (25) ஆகியோர் என தெரியவந்துள்ளது.இவர்கள் இரவு நேரங்களில் தனியாக செல்கின்ற நபர்களிடம் வழிப்பறி நடத்துவது தொழிலாகக்கொண்டுள்ளதாகவும், கடந்த  31ம்தேதி ரிஜூ என்பவரிடம் தங்க செயின் மற்றும் செல்போன் பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து தங்க செயின் மற்றும் செல்போனை மீட்டனர்.


Tags : dealer ,
× RELATED உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி